
தெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது. ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.
நல்லவை போன்று தோன்றும்படி, கட்டமைத்து தான் தீமைகள் அனைத்தும் மக்களிடம் விதைக்க படுகின்றது, ஆகையால் நிகழ்வுகள் எதுவாகினும், அவற்றை பகுத்தறிந்து எடுத்துரைப்பது காலத்தின் தேவை. எடுத்துரைக்கும் கருத்துகளை முறைப்படுத்தி, நேர்மையான தரவுகள், புள்ளிவிவரங்களுடன் இணைத்து, படிப்பவரது கவனத்தை ஈர்க்கும் வகையில், எளிய நடையில் கட்டி உரைக்கும் வருங்கால தலைமுறைக்கான களம்