
தெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது. ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.
கதை கேட்காமல் வளர்ந்த குழந்தையும் இல்லை, கதைச் சொல்லாத பாட்டியும் இல்லை. வயது பாகுபாடு இன்றி அறநெறிகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உதவுவது சிறுகதைகள். ஒரு வரியில் பேசினால், எழுதினால் அது செய்தி. அதையே சிறுகதையாக சொன்னால் படிப்பவரை அந்த நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்று, கண்முன்னே நடப்பது போன்ற உணர்வினை உருவாக்கிட இயலும். சிறுகதை சிற்பிகளின் களம்.